பெரியார் பிறந்த தினத்திலே… அண்ணாவின் ஊரிலே விழுந்தவன் மாபெரும் தலைவனாக வருவான் –டிடிஎஃப் வாசன் குறித்து மஞ்சள் வீரன் இயக்குனர்!

சனி, 4 நவம்பர் 2023 (07:13 IST)
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பைக்கில் பிரபல பைக்கரான டிடிஎஃப் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம். இந்நிலையில் வெளியில் வந்துள்ள அவர் தன்னிடம் சர்வதேச ஓட்டுனர் உரிமம் இருக்கிறது என்பதல் தொடர்ந்து பைக் ஓட்டமுடியும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த வாசனை வரவேற்ற மஞ்சள் வீரன் பட இயக்குனர் செல்அம் “செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள். தம்பி வாசன் விபத்து நடந்தது காஞ்சிபுரம்… பெரியார் பிறந்தநாளிலே, அண்ணா பிறந்த ஊரிலே விழுந்த ஒருவன், இந்த தமிழ் மண்ணில் வருவான் வெல்வான்” என புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் விமர்சனங்களையும் கேலிப்பொருளாகவும் மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்