சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளித்த நேர்காணலில் தனது அடுத்த படங்களின் வரிசை பற்றி பேசியுள்ளார். அதில் “அடுத்து சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுதான் என்னுடைய அடுத்த படம். அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம். புஷ்கர் காயத்ரி ஆகியோரோடு இணைந்து ஒரு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதில் அவர் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் குட்னைட் புகழ் வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.