இந்த படம் மிகப்பெரிய வெற்றி என்றில்லாவிட்டாலும், தோல்வியும் இல்லை என்று வசூல் செய்துகொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ப்ரமோட் செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் நேர்காணல்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அப்படி அவர் அளித்த நேர்காணலில் தனது அடுத்த படங்களின் வரிசை பற்றி பேசியுள்ளார். அதில் “அடுத்து சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுதான் என்னுடைய அடுத்த படம். அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம். புஷ்கர் காயத்ரி ஆகியோரோடு இணைந்து ஒரு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.