வண்டலூர் யானை, சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (13:21 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் சிங்கம் மற்றும் பெண் யானை ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

சென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் உணவு தேவைகளை கவனிக்க விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தை வண்டலூர் பூங்கா செயல்படுத்தி வருகிறது.

இதன்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் விலங்குகளை தத்தெடுத்து அவற்றின் பராமரிப்புக்கு தேவையான பணத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2018-20ம் ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற வெள்ளைப்புலியை தத்தெடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது வண்டலூரில் உள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்