சிம்புவின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது? எங்கே? – வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:44 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தேசிங்  பெரியசாமி கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி ‘தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை.

இதையடுத்து தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரத்தில் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்