’ஆர்.ஆர்.ஆர்.’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது: ஜூலைக்குள் முடிக்க திட்டம்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (15:51 IST)
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் இரண்டாவது காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு ஜூலையில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 13ம் தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கான், சமுத்திரகனி, ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். விஜயேந்திர பிரசாத் கதையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்