விழாவில் அவர் பேசும்போது “தமிழ் சினிமாவில் கதை சொல்லலில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் மூன்று பேர். பாரதிராஜா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியவர்கள். ஷங்கர் படங்களில் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூகக்கருத்துகளும் இருக்கும். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, இன, மதம் என எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.