பிரபுதேவா இயக்கத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்?

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (09:51 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

இந்நிலையில் இப்போது பிரபுதேவா மீண்டும் இயக்குனர் அவதாரத்தை எடுக்க உள்ளாராம். அவர் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் நடிகராக அறிமுகமாகவுள்ளாராம். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்