மலையாளத் திரை உலகிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தவர் நடிகர் ரோஷன். இவர் திருச்சூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னர், திருமணம் செய்ய மறுத்துவிட்டதை தொடர்ந்து, அந்த இளம் பெண் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள், நடிகர் ரோஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அப்பெண்ணுடன் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மை என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.