3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய காமகோடியன் மரணம்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (12:08 IST)
தமிழ் திரையுலகில் மூத்த கவிஞர்களில் ஒருவர் காமகோடியன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

 
தமிழ் திரையுலகில் மூத்த கவிஞர்களில் ஒருவர் காமகோடியன். இவர் இயற்பெயர் சீனிவாசன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இறுதி வரை இவர்  கூடவே பணியாற்றியவர். இவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
 
இவர் தமிழ் திரையுலகில் 80களில் பிரபலமாக  இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இவர் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்