தனுஷின் ’நானே வருவேன்’’ பட புதிய அப்டேட்

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (20:23 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடைசியாக பட்டாஸ் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தார். அதற்கு முன்னர் கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே அட்டர் ப்ளாப் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்