அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது. "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதையடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ரஜினி, விஜய், கமல் போன்ற பெரிய நடிகர்களை இயக்கிவிட்டு அடுத்து கார்த்தியோடு படம் பண்ணுவது சிரமமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் “நான் யாரென்று நிரூபிக்கும் முன்னரே எனக்கு கைதி என்ற பெரிய பட வாய்ப்பைக் கொடுத்தவர் கார்த்தி. அதனால் மற்ற எல்லா ஹீரோக்களையும் விட எனக்கு அவர்தான் பெரிய ஹீரோ” எனக் கூறியுள்ளார்.