கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

vinoth

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (14:31 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படம் ரிலீஸாகி ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் சில காட்சிகள் இலங்கை தமிழ் மக்களை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதிமுக தலைவர் வைகோ இது சம்மந்தமாக கண்டனம் தெரிவித்து இந்த படம் தமிழ் நாட்டில் திரையிடப்படக் கூடாது எனக் கண்டித்தார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இந்த படம் ஓடிய தியேட்டர் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் உருவாக அந்த தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்