மேடையில் கண்கலங்கி ஸ்தம்பித்துப் போய் நின்ற லிங்கும்சாமி… தி வாரியர் பிரஸ்மீட்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:06 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ‘தி வாரியர்’ படத்தின் ப்ரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் லிங்குசாமிக்காக இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு அவர் இந்த படம் மூலம் மீண்டும் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை அளித்து பேசினர்.

கடைசியில் பேசிய இயக்குனர் லிங்குசாமி பேச ஆரம்பிக்கும் போது கண்கலங்கி எதுவும் பேச முடியாமல் சில வினாடிகள் ஸ்தம்பித்துப் போய் நின்றார். அப்போது படத்தின் ஹீரோ அவரை கட்டியணைத்து ஆற்றுப்படுத்த, அதன் பின்னர் பேச ஆரம்பித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்