இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதைகளில் நடிக்கிறேன். தமிழில் இருந்து நல்ல கதை வந்தால் உடனடியாக இங்கு ஓடோடி வந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.