வெளிநாட்டு மொழிகளில் டப் ஆகி ரிலீஸ் ஆகும் காந்தாரா?

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (07:18 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ஆனால் படம் வசூலை வாரிக்குவித்தது. சுமார் 16 கோடியில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சென்ற ஆண்டின் மிகப்பெரிய லாபம் பார்த்த படமாக அமைந்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் வசூலில் கலக்கிய காந்தாரா திரைப்படம் இப்போது இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்