காந்தாரா 2 வில் ரஜினிகாந்த் நடிகிறாரா?... இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் பதில் இதுதான்!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (11:08 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ஆனால் படம் வசூலை வாரிக்குவித்தது. சுமார் 16 கோடியில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சென்ற ஆண்டின் மிகப்பெரிய லாபம் பார்த்த படமாக அமைந்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இரண்டாம் பாகம் பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதுபற்றி இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் கேட்டபோது எந்தபதிலும் சொல்லாமல் சிரித்து மழுப்பி சென்றுவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்