விஜய்யின் வேலாயுதம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? – இயக்குனர் மோகன் ராஜா பதில்!

சனி, 4 மார்ச் 2023 (10:08 IST)
விஜய்யை வைத்து 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தை இயக்கினார் மோகன் ராஜா. அந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அந்த படம் கலவையான விமர்சனம் பெற்றாலும், நல்ல வசூலைப் பெற்றது. இதன் பின்னர் விஜய்யின் படங்களை சில முறை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக பேச்சுகள் எழுந்தன. இது சம்மந்தமாக முன்பு ஒருமுறை பேசிய ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் தாமதமானாலும் நல்ல படமாக கொடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில் பேசிய அவரிடம் “வேலாயுதம் மற்றும் தனி ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வருமா” எனக் கேட்ட போது, “கண்டிப்பாக வரும். ஆனால் இந்த ஆண்டு அல்ல. அடுத்த ஆண்டு வரும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்