35 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்-மணிரத்னம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (18:16 IST)
35 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்-மணிரத்னம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது
 
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியானது. இதனை அடுத்து கமல்ஹாசன் மணிரத்னம் மீண்டும் இணையும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் ரஹ்மான் இசை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கமலஹாசன் மணிரத்னம் என்ற தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்