அரவிந்த்சாமியை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்...

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:52 IST)
விரைவில் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

 

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரியான அரவிந்த் சாமி, மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் பாப்புலரானார். அதைத் தொடர்ந்து வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’, நிர்மல் குமார் இயக்கத்தில் ‘சதுரங்க வேட்டை 2’, சித்திக் இயக்கத்தில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அரவிந்த் சாமி. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டேஜில் உள்ளன.
 
அடுத்ததாக, மணிரத்னம் இயக்கவுள்ள மல்ட்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. அதைத் தொடர்ந்து. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக இந்தப் படம் உருவாக இருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் தற்போது பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ‘ஜெய் சிம்ஹா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்