7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் ஜெயம் ரவி - நயன்தாரா!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:26 IST)
7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் ஜெயம் ரவி - நயன்தாரா!
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜனகனமன என்பதும் இந்த படத்தை என்றென்றும் காதல் இயக்குனர் அஹ்மத் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக இயக்குனர் அஹ்மத் தெரிவித்துள்ளார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் இந்த படத்தில் நயன்தாராவை மீண்டும் நடிக்க வைத்து உள்ளதாக அஹ்மத்  தெரிவித்துள்ளார்
 
இந்த படம் ஒரு சைக்காலஜி திரில்லர் படம்என்றும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடிக்க இருப்பதாகவும் இயக்குநராக தெரிவித்துள்ளார் 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்