ராஜமௌலி மகேஷ் பாபு படத்தில் இணைகிறாரா விக்ரம்?... அவரே பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக ஒரு தகவல் பரவி வருகிறது. தங்கலான் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்ற விக்ரம் பேசும்போது “ராஜமௌலி என் நண்பர். நீண்ட நாட்களாக அவரோடு இணைந்து ஒரு படம் பண்ண்வேண்டும் என பேசி வருகிறோம். ஆனால் அது எந்த படம் என்று முடிவாகவில்லை. விரைவில் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆந்திர ரசிகர்கள் மகேஷ்பாபு படத்தில்தான் விக்ரம் நடிக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்