தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர் “நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் (விமர்சனங்கள்) முடிவுசெய்ய நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும் போது.. நான் முயற்சித்தேன்… நான் என்னால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்தேன் என மகிழ்ச்சியடைய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளர்.