ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமாக வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பார். பார்ட்டி மற்றும் மன்மத லீலை ஆகிய படங்களுக்கு மட்டும் பிரேம்ஜி இசையமைத்திருந்தார். இப்போது முதல் முறையாக அனிருத் வெங்கட்பிரபு படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.