தன்னுடைய பாடல்களின் காப்புரிமையைப் பெற்றுள்ள சோனி, எக்கோ ரெக்கார்ட்ஸ், ஓரியண்டல் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி ஈட்டிய வருவாயை சமர்ப்பிக்க நீதிமன்றம் சோனி ம்யூசிக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.