இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான ட்யூட் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஐந்து நாளில் 96 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய இயக்குனர் கீர்த்தீஸ்வரன் “இந்த படத்தில் நாங்கள் புதிதாக சொல்லியுள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் நிறையப் பெரியவர்கள் இருந்துள்ளார்கள். ஒரு பெரியவரும் இருந்தார், அவர் நிறைய சொல்லியுள்ளார். அந்த பெரியவர்கள் சொன்ன வழியில் வந்துதான் நாங்கள் இதை சொல்லியுள்ளோம். புதிதாக எதையும் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.