ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதவாக்கில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் அல்லது பிரேம்ஜி ஆகிய இருவரில் ஒருவர்தான் இசையமைப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் அழுத்தத்தால் இந்த படத்திற்குள் அனிருத் கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.