வேட்டையன் படத்துக்கு பிறகு ஞானவேல் இயக்கும் படத்தின் ஹீரோ இவர்தான்!

vinoth

சனி, 4 மே 2024 (16:42 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞானவேல் அடுத்து இயக்கும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் திரைப்படத்தில் முதலில் நானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை. ஆனால் அவர் சொன்ன வேறு ஒரு கதையில் கதாநாயகனாக நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்