ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

Siva

வியாழன், 26 ஜூன் 2025 (18:25 IST)
பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், இனிமேல் 6000 கோடி ரூபாய் அளவில் சினிமாவில் முதலீடு செய்யப் போவதாகவும், இதில் பெரும்பாலும் பக்தி படங்களைத் தயாரிக்க உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே பிலிம்ஸ், ஏற்கெனவே பல வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் வருடத்திற்கு ஒரு பக்தி படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்க போவதாகவும், ஒவ்வொரு படமும் கிட்டத்தட்ட 500 கோடி முதல் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுமட்டுமின்றி, ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகும் ஒரு படமும், 'கே.ஜி.எஃப் 3' படமும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் திட்டப் பட்டியலில் உள்ளன. மக்களுக்கு பக்தி படங்களை அதிகமாக தர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நிறுவனம் பல பக்தி படங்களை உருவாக்க இருப்பதாகவும், அனைத்து பக்தி காட்சிகளும் பிரம்மாண்டமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஆகவே, இனி வருடத்திற்கு ஒரு பிரமாண்டமான பக்தி படம் வருவது உறுதி என்பது ஹோம்பாலே பிலிம்ஸின் இந்த அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்