தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் நகை திருட்டு! பணிப்பெண் தற்கொலை முயற்சி!

Prasanth Karthick

வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:44 IST)
சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் நகை திருடு போன வழக்கில் பணிப்பெண்ணிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் சினிமாவில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. கடந்த மாதம் இவர் தனது மனைவிக்கு வாங்கி அளித்த தங்க நகைகள், பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் லெட்சுமியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் நகைகளை திருடவில்லை என சொன்னதாகவும், விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என சொல்லி போலீஸார் அவரை அனுப்பிதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று விசாரணைக்காக வரும்படி போலீஸார் சொல்லியிருந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த லெட்சுமி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்