என் சினிமா வாழ்வில் புஷ்பா திரைப்படம் எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை.. பஹத் பாசில் ஓபன் டாக்!

vinoth
புதன், 8 மே 2024 (07:31 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மலையாள நடிகர்கள் கேரளா தாண்டியும் கொண்டாடப்படுகிறார்கள். அதில் முக்கியமானவர் பஹத் பாசில். அவர் மலையாளம் தாண்டி பிற மொழிகளில் நடித்த புஷ்பா, மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. புஷ்பா திரைப்படத்தில் அவர் நடித்த பல்வீர் சிங் என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்போது அவர் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் புஷ்பா திரைப்படம் தன் சினிமா வாழ்க்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் இப்படி சொல்வதால் புஷ்பா படத்தை அவமதிக்கவில்லை. அந்த படம் முழுக்க முழுக்க இயக்குனர் சுகுமாரின் அன்புக்காக செய்தேன். என்னுடைய முழு கவனமும் இப்போது மலையாள சினிமாவில்தான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்