இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம், பிரசாந்தின் 55-ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் நாயகியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதுமட்டுமின்றி இன்னொரு பிரபல நடிகரும் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.