பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (12:19 IST)
பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்:
பிரபல தமிழ் தெலுங்குத் திரைப்பட எடிட்டர் கோலா பாஸ்கர் அவர்கள் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக எடிட்டர் கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஐதராபாத்தில் காலமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எடிட்டர் கோலா பாஸ்கர் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ ’யாரடி நீ மோகினி’ உள்பட பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் விஜய்யின் ’போக்கிரி’ செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களுக்கும் அவர் எடிட்டிங் செய்துள்ளார் 
 
அது மட்டுமன்றி தனது மகன் ஹீரோவாக நடித்த ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபல எடிட்டராக இருந்து வந்த கோலா பாஸ்கரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்