நடிகர் தனுஷ் நடித்த 'அம்பிகாபதி' என்று தமிழில் வெளியான இந்தி படமான Raanjhanaa திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, தயாரிப்பு நிறுவனத்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்ட ஆனந்த் எல். ராய், தனது அனுமதியின்றியும், அக்கறையின்றியும் இந்த மாற்றம் செய்யப்பட்டதை ஒரு "துரோகம்" என குறிப்பிட்டுள்ளார்.