தனுஷ் கசமுசா?: கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு நச் பதிலடி!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (09:56 IST)
நடிகர் தனுஷை பற்றி சமீபகாலமாக கிசுகிசுக்கள் சகட்டு மேனிக்கு வருகின்றன. முக்கியமாக நடிகை அமலா பால் விவகாரத்தில் நடிகர் தனுஷ் பற்றிய கிசுகிசு தீயாக பரவியது.


 
 
அதற்கு பின்னர் எந்த நடிகைக்கு பிர்ச்சனை என்றாலும் அதில் நடிகர் தனுஷை எப்படியாவது இணைத்து பேசி சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள். மஹாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா என அவரை கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள்.
 
ஏன் சமீபத்தில் வந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் கூட நடிகர் ஆர்ஜே பாலாஜி தனுஷை கலாய்த்திருப்பார். அந்த அளவுக்கு நடிகர் தனுஷ் குறித்து தமிழகமே அந்த விஷயத்தில் கிசுகிசுத்துக்கொண்டிருந்தது.
 
ஆனால் நடிகர் தனுஷ் இவற்றிற்கு எந்த பதிலும் கூறாமல் தனது வேலைகளை கவனித்து வந்தார். பவர் பாண்டி என்ற படத்தை எடுத்து அதனை வெற்றிப் படமாகவும் மாற்றி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்துவிட்டார். யார் என்ன விமர்சித்தாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக முன்னேறிக்கொண்டே இருக்கிறார் நடிகர் தனுஷ்.
 
இந்நிலையில் நடிகர் தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வரும் கிண்டல்கள் குறித்து பதில் அளித்த தனுஷ், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை தான் நான் பவர் பாண்டி படத்திலும் கூற முயற்சித்தேன். நான் எப்பொழுதுமே நல்லதையே நினைக்க விரும்புகிறேன். இந்த மெச்சூரிட்டி என்னை அமைதியாக இருக்க வைத்துள்ளது என்றார்.
அடுத்த கட்டுரையில்