தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு?.. காரணம் இதுதான்!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (11:19 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் கடைசி கட்டப் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட படி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. மேலும் ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் பாதுகாப்பான ஒரு தேதிக்கு இந்த படம் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்