அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

vinoth

வியாழன், 5 ஜூன் 2025 (13:45 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனரானார் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோரை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் இரண்டுமே பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. அதனால் அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதனால் அவர் நானியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நானியின் சமீபத்தையத் தோல்விகளால் தற்போது அந்த படமும் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்