சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வந்த பராசக்தி திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனை காரணமாக தலைமறைவாக உள்ளார் என்பதும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மணிகண்டன் நடித்த குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டதாகவும், இதனை அடுத்து ஜூலையில் பராசக்தி படத்திற்காக கொடுத்த தேதிகளை இந்த படத்திற்கு மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜூலை வரை சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படத்தில் நடித்துக் கொண்டு இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.