கலெக்டர் வேடத்தில் நடிக்கும் யாஷிகா ஆனந்த்… கவனம் ஈர்த்த முதல் லுக் போஸ்டர்!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (06:58 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவோடு அவர் நடித்திருந்த கடமையை செய் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.

இதனால் அவர் மேல் ஒரு எதிர்மறையான பிம்பமே இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் ஆர் பி வெங்கட் இயக்கத்தில் ‘கலெக்டர்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்