போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.
இந்நிலையில் அவரை விசாரிக்க போலீஸார் அவர் வீட்டுக்கு சம்மன் அளிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லையாம். இதையடுத்து அவர் உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆகவேண்டுமென வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவுக்குத் தப்பித்து ஓடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து நடிகர்கள் இந்த வழக்கில் சிக்குவதால் போதை பொருள் பயன்படுத்தும் சினிமா பிரபலங்களின் பட்டியல் அதிகமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.