பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

Prasanth K

புதன், 25 ஜூன் 2025 (13:15 IST)

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பெண் ஒருவர் காதலனை பழிவாங்க தொடர்ந்து வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில காலமாகவே விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுவது, பள்ளி, கல்லூரிகள், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு குண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற போலி மிரட்டல் விடுப்பவர்களை சைபர் க்ரைம் போலீஸார் தேடி பிடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் சில வெடிக்குண்டு மிரட்டல்கள் தொடர்ந்து ஒரு நபரின் இமெயில் ஐடியில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதை போலீஸார் ட்ரேஸ் செய்தபோது அந்த மெயிலை உருவாக்கியவர் சென்னையை சேர்ந்த ஐடி பெண் ரீனே ஜோசிடா என தெரியவந்துள்ளது.

 

ரோபோடிக் எஞ்சினியரிங் படித்த ஜோசிடா தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஒரு தலையாக இளைஞர் ஒரூவரை காதலித்து வந்த நிலையில் அவர் காதலை ஏற்கவில்லை என் கூறப்படுகிறது.

 

இதனால் அந்த இளைஞரை பழிவாங்க அவரது பெயரில் போலி மெயில் ஐடியை உருவாக்கிய ஜோசிடா கடந்த சில மாதங்களுக்குள் 12 மாநிலங்களில் மொத்தம் 21 வெடிக்குண்டு மிரட்டல்களை விடுத்துள்ளார். 

 

நரேந்திர மோடி மைதானத்திற்கு, ஏர் இந்தியா விமான விபத்திற்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு, அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு என பல வகையில் வெடிக்குண்டு மிரட்டல்களை அனுப்பி தள்ளியுள்ளார் ஜோசிடா. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்