சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் தோல்வி படமாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ஒரு படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கும் நிலையில், தற்போது சூர்யா படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.