அதிர்ஷ்டத்தில் அரைசதம் அடித்த உத்தப்பா!

ஞாயிறு, 6 மே 2018 (19:04 IST)
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ர கொல்கத்தா பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரிஸ் லின் மற்றும் கிள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி திணறியது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 4 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை மும்பை வீரர் நழுவவிட்டார்.
 
இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொண்ட ராபின் உத்தப்பா மும்பை அணி பந்து வீச்சை சிதறடித்து அரைசதம் விளாசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்