பறக்கும் சீக்கியர் மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:22 IST)
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரரான மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் 91 வயதான மில்கா சிங்குக்கு 101 டிகிரி காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் இப்போது வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்