இந்திய அணியை சீண்டி டுவிட் போட்ட கெவின் பீட்டர்சன்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:00 IST)
இந்திய அணியை சீண்டி டுவிட் போட்ட கெவின் பீட்டர்சன்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த போட்டியின் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றியை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்திய அணியை சீண்டும் வகையில் கெவின் பீட்டர்சன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் இங்கிலாந்து ’பி’டீமை வென்றதற்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் 
 
இந்திய அணியை சீண்டும் விதமாக தொடர்ந்து பதிவு செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது அதிகமாக ஆட வேண்டாம் என்று ஏற்கனவே கூறினேன் என்று கெவின் பீட்டர்சன் டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்