3வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (14:48 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது 
இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தொடரை வென்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்றதை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய அவர் முடிவு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணிகளிலும் இன்று விளையாடும் வீரர்கள் விபரம் பின்வருமாறு:
 
இந்திய அணி: பிரிதிவி ஷா, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ரானா, கெளதம், ராகுல் சஹார், சயினி, சேட்டன் சக்ரியா,
 
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா, பனுகா ராஜபக்சே, தனஞ்செயா டிசில்வா, சாரித் அஸ்லாங்கா, தடன் ஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, தசன் துஷ்மந்தா, அகிலா தனஞ்செயா மற்றும் ப்ரவீன் ஜெயவிக்ரமா
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்