வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் எதிரான ஆட்டத்தில், லக்னோ அணி பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடிக்கும் முதல் இந்திய வீரராகும் வாய்ப்பு இருந்தது. 5 சிக்ஸர்கள் அடித்திருந்தால் அவர் இந்த பெருமையை பெற்றிருப்பார்.
ஆனால் மயங்க் யாதவ் வீசிய ஓவரில், ரோஹித் தொடர்ச்சியாக 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், அடுத்த 2 பந்துகளில் ரன் எடுக்காமல் இருந்த நிலையில் 5வது பந்தில் மெதுவாக வந்த பந்தை விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார்.
இதனால், ரோஹித் 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து, 5 சிக்ஸர்களை அடிக்க வேண்டிய இலக்கை எட்டாமல், புதிய சாதனையை தவறவிட்டார். இருப்பினும் அவர் இந்த சாதனையை அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.