கோலி எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார்… தென் ஆப்பிரிக்கா கேப்டன்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (16:47 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் வெற்றிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. அசுர பாலத்தோடு இருந்த இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி பற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் ‘கோலி ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதை விடுத்து எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார். ஆனால் அதுதான் எங்களை வெற்றியை நோக்கி உந்தியது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்