இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… விலகிய ஆல்ரவுண்டர்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:23 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளுக்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்‌ஷர் படேல் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகுகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது. அவருக்குப் பதிலாக இந்திய அணியில் ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்