அருண் கார்த்திக் அபார சதம்.. சேப்பாக் கில்லி அணியை பந்தாடிய நெல்லை கிங்ஸ்..!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:10 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
 
 முதலில் நடந்த சேப்பாக் மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் 79 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி நெல்லை அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டன்மான அருண் கார்த்திக் சதம் அடித்தார். இதனை அடுத்து 18.5 ஓவர்களில் நெல்லை அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து நெல்லை அணி 8 புள்ளிகள் இடம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சேலம் அணி மிக மோசமாக விளையாடி 98 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மதுரை அணி 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்